திங்கள், ஜனவரி 23, 2012

விரல்களிலிருந்து பிரியும் விரல்கள்..

*
முதலிரண்டு முத்தங்களில் மலர்த் தோட்டத்தின்
வாசனைகள் படர்ந்திருந்தது

பட்டென்று புறப்பட்ட
ரயில் ஜன்னல்வழி நீண்டிருந்த கையோடு
விரல்களிலிருந்து பிரிந்த விரல்களின்
பிரியத்தில் மலர்ந்திருந்தது ரகசிய முத்தமொன்று

புள்ளியாகிவிட்ட விரலசைவுகளின்
மௌனம்
பிளாட்பார நீளத்திற்கு வெறிச்சோடிக் கிடக்கிறது
திரும்பி நடக்கும் நிமிடம் முழுவதும்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக