வியாழன், மே 29, 2014

பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன்

*
கீழுதடு மடித்துக் காத்திருக்கிறாள்
நிரம்பித் தளும்பும் கண்களில்
பதிய மறுக்கிறது நகரும் பிம்பங்கள்

ஸ்ட்ரெச்சரின் சக்கர உருளைகள்
நினைவை இழுக்கின்றன

'இரு..' - என்பதாக
உள்ளங்கை அழுத்திப் போனவனின்
வெப்பச் சூட்டில்
அதிகமாய் வியர்க்கிறது

மருந்தின் நெடியை மீறுகிறது
நோயின் வாசனை

பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவனின்
புதிரை
மடியில் கிடத்தி வைத்திருக்கிறாள்

வெளியே வானம் இருளக்கூடும்
எல்லோரிடமும் குடைகள் உண்டு

யாராவது
ஒரு டீ குடிக்க அழைக்க மாட்டார்களா
என நெஞ்சு விம்முகிறது

யாராவது
யாராவது

****

நன்றி : ' கீற்று ' இனைய இதழ் [ ஏப்ரல் -25 - 2014 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/26381-2014-04-25-07-22-07

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக