வியாழன், மே 29, 2014

தயக்க மலரின் ஒற்றையடிப் பாதை..

*
ஸ்பரிச விலகலில் கரையும் அந்திக் கீற்றை
நதியலையில் இசை மீட்டுகிறேன்

கடந்துபோகும் காற்றில்
நழுவிடாமல் பிரயத்தனப்படும் உன் புன்னகையின்
மலைப்பாதை வெளியெங்கும் புயல் வீசுகிறதே

தயக்க மலரின் மகரந்தத் துகள்களைப் பற்றும் பொருட்டு
என் வண்ணத்துப்பூச்சியின் கால்களில் தூரிகைக் கட்டுகிறேன்

ஓவிய வனமாகப் போகும் ஒற்றையடிப் பாதையின்
மருங்கெங்கிலும் நீ காத்திரு

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக