வியாழன், மே 29, 2014

வனமழிந்து அழுகும் ஆப்பிள் மரங்கள்

*
கானல் தகிக்கும் தார் ரோட்டின்
கருஞ் ஜல்லியை
உருக்கி எரியும் சிக்னல்

கையேந்தி நகரும் ரேகை நதியில்
மிதக்கிறது உச்சிப்பகல்

ஹாரன்கள் அலறும் நகரத்தின் விலாவில்
பசியோடு புரண்டுத் திரும்புகிறாள்
செம்பட்டை ஏவாள்

வனமழிந்து அழுகிய ஆப்பிள் மரத்தைத் துருப்பிடித்து
மெலிந்து தகிக்கும்
உருவகக் கம்பத்தின் தலையில்
கூடு கட்டி முட்டையிடுகிறான் ஆதாம்

பாவச் சம்பளத்தை ரகசியமாய் புரட்டிப் பழகிய
சர்ப்பத்தின் பிளந்த நாவிடுக்கில்
உலோக விசில் சத்தம்

****


நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ மார்ச் - 10 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2228

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக