வெள்ளி, ஜூன் 27, 2014

நீர் மனிதனின் ஆக்சிஜன் குமிழ் முட்டைகளும்..சாயம் மங்கிய வலையொன்றும்..

*
குளிர் காலத்தில் புகைப் படிந்துவிடும்
மீன் தொட்டிகளில்
மீன்கள் உறைகின்றன
பிளாஸ்டிக் செடிகளுக்கு நடுவே

அவை
நடுங்கும்படியான இரைத் துகள்கள்
உப்பி ஊறும் வரை

எப்போதும்
அசைந்தும் மிதந்தும் ஒரே திக்கை வெறிக்கும்
நீர் மனிதனின் ஆக்சிஜன் குமிழ் முட்டைகள்
தனித்த உயிர் போல மேலேறி
தண்ணீர்ப் பரப்பில் உடையும் வரை

பூட்டிய வீட்டின் சாவித் துவாரம்
மீண்டும் இருளாகி
மீண்டு
திறக்கப்படும் வரை

சாயம் மங்கிய வலையொன்று நீருக்குள்
துழாவப்படும் வரை

உறைகின்றன மீன்களின்
கண்கள்
நினைவுகள்
உப்பி ஊறி துழாவி
மற்றும் உடைந்து

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக