வெள்ளி, ஜூன் 27, 2014

கண் கூசும் நிர்மூலங்கள்..

*
பறந்து சுழலும் துயரின் நிழல்
ஜன்னல் துளை வழியே இறங்கும்
வெயில் கற்றையைப் பற்றிக் கொள்கிறது

மேஜை விளிம்பில் வைக்கப்பட்ட
சில்வர் குடுவையின் வாய்ப் பகுதி
ஒற்றியெடுப்பதற்கான  உதடுகளுக்காக காத்திருப்பதாக
உச்சரிக்க அஞ்சும் சொற்கள் தயங்குகின்றன

துயரின் நிழல்
தன்னகத்தே கொண்டிருப்பதில்லை
எப்போதும் ஒரு வெளிச்சத்தை

கண் கூசும் சாயல்களோடு பூசிச் சிரிக்கும்
நிர்மூலங்களை இறக்கி வைக்கவே
ஏந்தும் கைத்தலம் நடுங்கும்போது

அறையும் இரவும் உறையத் தொடங்குகிறது
ஓசையற்று 

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக