திங்கள், ஜூன் 30, 2014

நஞ்சு தீண்டிய கண்களின் சாந்தம்

*
அமைதியற்று நீளும் இரவு 
மலைப்பாதைகளின் வளைவை ஒத்திருக்கிறது 

தின்று செரிக்காத நினைவுகளின் நிழல் 
மலைப்பாம்பாகிறது   

நஞ்சு தீண்டிய கண்களின் சாந்தம் 
சொற்களை முறித்துக்கொண்டு இறுகுகிறது 
உடலாகி 

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக