ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

உன் அகாலங்களின் வெளிச்சத்தில்..

*
உன்னோடு பேசிய ஒவ்வொரு இரவும்
விளக்கொளியின் கீழ் பரவும் நிழல் பூசிக் கிடந்தது

உனக்கென எழுதிய அனைத்து வரிகளிலும்
இரவு மழையின் ஈரம் துளிர்த்திருந்தது

சொற்கள் பூத்த சிலிர்ப்பில் உனக்கான புன்னகையின்
இசையை அர்த்த இழையென கேட்க முடிந்தது

நான் ஒதுங்கும் கூரையாக மாறியது
உன்னை எழுதும் கடிதப் பத்தி அனைத்தும்

உன் அகாலங்களின் வெளிச்சத்தில்
யாருமற்ற நெடுஞ்சாலை இரவின் தனித்த இருப்பில்
சிறு தூறல் ஆனோம் இருவரும்

என்னோடு என்றென்றும் பயணிப்பாய்
என் இனிய நண்பனே

****

( 2013 -ல் ஒரு நவம்பர மாதத் தனிமை இரவில் நண்பன் எம். ரிஷான் ஷெரிப்புடன் பகிர்ந்து கொண்ட மழைப்பொழுதின் ஈரம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக