ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

ஏற்கனவே செத்துப்போன ஒரு பழைய காயம்..

*
என்னை ஒருத்தி காயப்படுத்தினா.
அந்தக் காயத்தை என்ன பண்ணுறதுன்னு புரியாம உட்கார்ந்திக்கிட்டு இருந்தேன்.


அப்போ அந்தக் காயம் என்கிட்ட வந்து இரண்டு சிறகுகள் கேட்டுச்சு.

கொஞ்சம் யோசிச்சேன்.

ஏற்கனவே செத்துப்போன ஒரு பழைய காயத்தோட சிறகுகளை எடுத்து இந்த புது காயத்துக்கு கொடுத்தேன். 


அது என்னை விட்டுப் பறந்து போயிடும்ன்னு நினைச்சேன்.

ஆனா -

அது அந்தப் பழைய சிறகுகளைப் பொருத்திக்கிட்டு என் தனிமை வெளி மீதே பறக்கத் தொடங்கிருச்சு. அதனோட நிழல் இந்த வெளியெங்கும் அலைந்தபடியே இருந்துச்சு.

இப்போ நல்லா இருட்டின பிறகும் அந்த நிழல் என் மீது பட்டுக்கிட்டே இருக்கு.

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக