ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

அழைக்கும் குரலில் கூடொன்றை முடையும் பறவை..

*
ஒடை மரத்துக்குள் புதைந்த நிலவை 
மீட்கத் தெரியாத இரவின் விரல்களைச் 
சுற்றிக் கொண்டுபடபடக்கிறது காற்று 

பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து 
அழைக்கும் உன் குரலில்  
கூடொன்றை முடைகிறது துயரப் பறவை 

நானற்ற வானின் நட்சத்திரக் குவியல்களை 
அபகரித்துகொள்ளும் சொல்லின் செதில்  
உப்புக்கரிக்கிறது நினைவில் 

****

1 கருத்து:

  1. உணர்வு பூர்வமான வரிகள்
    அருமை தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு