ஞாயிறு, ஜனவரி 31, 2010

தண்ணீரின் ஈரம்..

*

பரந்துபட்ட மனக்குகை..
கரடுத் தட்டிய நீள் பாதை..
சுனையொன்று உடைந்து விட்டது..

அள்ளிப் பருக குனிந்து நீட்டிய
உள்ளங்கையில்..
மீன்கள் கூட்டம்..

மென் சிறகு அசைத்து..
ஓயாத வாயளந்து..
எப்போதும் சொல்லிக் குடிக்கும்..

தண்ணீரின்..ஈரத்தை..

பத்திரமாய் ஆவணப்படுத்தும்..
இரவுக்காகக் காத்திருக்கிறேன்..

****

1 கருத்து: