வெள்ளி, ஜனவரி 29, 2010

இரவு நீளுதலின் மிரட்சி..

*

பூட்டப்பட்ட வீடுகளின்
தாழ்களில்..
தொங்கிக் கொண்டிருக்கும்
பூட்டுக்கள்..

ஒவ்வொரு பகல் பொழுதின்
கடைசி வெளிச்சத்தை..
நம்பிக்கையோடும்..

ஒவ்வொரு இரவு நீளுதலை
மிரட்சியோடும் எதிர்கொள்கின்றன..

வீட்டுக்குள்
எப்போது தஞ்சமடைவோம்
என்னும் குழந்தையின் தவிப்பைப் போல..

பூட்டப்பட்டிருக்கும் வீடுகளின்
தாழ்களில்..
தொங்குகின்றன
பூட்டுக்கள்..!

****

1 கருத்து:

  1. வீட்டுக்குள்
    எப்போது தஞ்சமடைவோம்
    என்னும் குழந்தையின் தவிப்பைப் போல..

    :))

    பதிலளிநீக்கு