வியாழன், ஜனவரி 28, 2010

அஞ்சலி..

*

நாம்
நடந்து கடந்துவிட்ட
பாதையின் சுவடுகளை..

அவசரமாய்
குழிப் பறித்து..
மூடுகிறது காலத் தூசி..

அஞ்சலியென..
கவனமாய்த் தலை கவிழ்கின்றன..

பாதையோரப் புற்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக