ஞாயிறு, ஜனவரி 31, 2010

கதையாடிய பனங்காடு..

*

மை இடுதல் குறித்து..
கதையாடினோம்
பனங்காட்டில்..

சலசலத்துச் சிரித்தன..
செம்பழுப்புப் பனையோலைகள்..

காய்ந்த புற்களின்..
இளமஞ்சள் படுகையில்..
வெயிலும் நிழலும்..
கட்டிப்பிடித்து உருளுகின்றன..

குமித்த சிறு மணல் மேட்டில்..
வாகாய் உட்கார்ந்தபடி..
வாய் பிளந்து கதைக் கேட்டுக் கொண்டிருந்த..

அமுதவல்லிக்கு..
மை இடுதல் குறித்த..
கண் பாவனை...
அகன்று கொண்டே போயிற்று..

மறுநாள்..
கண்ணுக்கு மையிட்டு பள்ளிக்கூடம் போவதாக
கையில்...சத்தியம் அடித்தாள்..

மீண்டுமொருமுறை
கதை சொல்லச் சொல்லி...
வாய் பிளந்து கேட்டாள்..

சலசலத்துச் சிரித்தன..
செம்பழுப்பு பனையோலைகள்..!

****

1 கருத்து: