வியாழன், ஜனவரி 21, 2010

அதிரும் நாணின் அலைகள்..

*

முற்றிலும் ஒரு புறக்கணிப்பு
வேண்டியதாக இருந்தது -
இன்றைய பகல் வெப்பம் பரவியபோது..

அவன்
தன் பார்வையின் மேற்பரப்பில்..
கானல் திரவத்தை மிதக்க விட்டிருந்தான்..
அதைப் பருகிவிடும் நிர்ப்பந்தம்..
சாத்தியப்பட்டிருக்கிறது
எதனாலோ உருவாகிவிட்டிருந்த சூழலுக்கு..

இந்தக் கண்கள்
மனசுக்குள் அனுப்பும் செய்திகள் எதுவும்..
வேண்டாம்..
எனவே...கண்களும் வேண்டாம்..

வழித்தடங்களை..
பாதங்களுக்குப் பழக்கிய கருணைத் தருணங்களை..
இப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது..

வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட
அம்புக்கு பின்பு..
அதிரும் நாணின் அலைகளை..
உணரத் தூண்டும்.. புறக்கணிப்பு ஒன்று..

முற்றிலும் வேண்டியதாக இருக்கிறது.. இப்போது..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) ஜனவரி - 18 - 2010

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2422

2 கருத்துகள்: