வெள்ளி, ஜனவரி 29, 2010

நிலவின் துணைக் கொண்டு..!

*

ஏதோ எரிச்சலில்
வேண்டா வெறுப்பாய்
தண்ணீர் ஊற்றியதில்..

தோட்டத்து ஜாதி மல்லிச் செடி
நள்ளிரவு வரை பூக்கவேயில்லை..

நிலவின் துணைக்கொண்டு..
'சாரி ' - என்றேன் கண் கசிந்து..

விடியலில்..
வெண் இதழ் விரியாமல் கை கூப்பி..
சின்ன சின்னதாய் முளைத்திருந்தன
நிறைய சமாதானங்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக