ஞாயிறு, ஜனவரி 31, 2010

மனிதப் புறக்கணிப்பைப் பற்றி..ஒரு அவச் சொல்..

*

ஒரு முறை
சொன்னதைத் தான்
மறுமுறை..முன்மொழிந்து சென்றான்...அவன்..

எப்போதும்..
அவனுக்கென்று ஒரு கோட்பாடு இருந்தது..
அதை உடைந்து விடாமல்
பார்த்துக் கொண்டான்..

மனிதப் புறக்கணிப்பைப் பற்றி..
அவச் சொல் வைத்திருந்தான்.

வசை வார்த்தைகளும்..
புனைந்தபடி இருந்தான்..

அவனுடைய நீண்ட இரவுகள்..
களம் அமைப்பதை..
தினமும் தாக்கல் செய்தான்..

முடிவுகளை யாரோ..
தன்னிடமிருந்து பறித்துவிட்டதாக
குறைப்பட்டுக் கொண்டான் - ஒரு நாள்.

பாதைகள் முற்றிலும்
அடைப்படப் போவதாகவும்..
பத்திரமாய்
தங்குவதற்கு...
என் இதயத்தில் ஒரு இடம் வேண்டும்
எனவும்..கேட்டுக் கொண்டான்..
மிகுந்த தயக்கங்களுக்கு பிறகு..

ஒரு முறை
சொன்னதைத் தான்
மறுமுறை..
முன்மொழிந்து
செல்கிறான்...அவன்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக