ஞாயிறு, ஜனவரி 31, 2010

நெற்றி வரிகளில்..வாசிக்கப் பழகு..

*

முறுக்கிவிடப்பட்ட மீசைக்கு
பின்னிருந்து
எட்டிப் பார்க்கும் முகஸ்துதி..

முடுக்கி விடும் புன்னகையை
இயக்குவது..
பெரும்பாலும்..
'கீழ்ப் பார்வை ' தான்.

விடைக்கும் மூக்கின் ரகசியங்களை
நெற்றி வரிகளில்..
வாசிக்கப் பழகு..

ஒரு வஞ்சமோ
துரோகமோ
சட்டென வருவதில்லை.

எதிரிலோ..
அருகிலோ..
எப்போதும் நம்முடன்
நடந்தபடியே..

****

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக