ஞாயிறு, ஜனவரி 31, 2010

காலடியில் கொட்டிய இரவு..

*

மௌனமொன்று
அகால மரணமடைந்து விட்டதாக..
என் வீட்டுக்கு
எதிர் சுவற்றில்..

எவனோ
ஒரு கருப்பு போஸ்டர்
ஓட்டிச் சென்றான்..

முன்பின்
முகம் தெரியாத
அந்த மௌனத்தின் அடையாளத்தை
என் தனிமைப் பால்கனியில்..

சிகரட் கரைய..
அவஸ்தைப்பட்ட சாம்பல் நிமிடங்கள்
உதிர்ந்தபடி சுமந்து வந்து..

இரவை என் காலடியில் கொட்டியது..

அது இறக்கும்போது
முகம் வெளிறியிருந்ததாக..
கனவில் குறிப்புச் சொல்லிப் போனான்..

அந்தப் போஸ்டர் ஒட்டிய
கருப்பு மனிதன்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக