ஞாயிறு, ஜனவரி 31, 2010

அம்பாரிகளை முடையும் விரல்கள்..!

*

இலக்குகளைத்
துளையிட்டுப் பாய்கின்றன
தீர்மானங்கள்..

கூர் தீட்டுதல் குறித்து
கவனமிழக்கிறது காலம்..

அம்பாரிகளை முடையும்
விரல்களில்..
நேயங்களைக் கிழிக்கின்றன நகங்கள்..

போர்க்களங்கள்..
புழுதிகளோடு காத்திருக்கின்றன..
எல்லா யுகங்களிலும்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக