வியாழன், ஜனவரி 28, 2010

கிளையகற்றி.. கை விரித்து..

*

யுத்தம் முடிவுற்ற அறிவிப்பை..
யாரும் சொல்லாமலே..

கரும்புகை விலகிய வானில்..
சிறகசைத்துக் கடக்கிறது பறவையொன்று..

கானகத்தின் விளிம்பை நெருங்கும்
கந்தக நொடியில்..
மூர்ச்சை அயர்ந்து..சிறகு ஓய்வதை..

கிளையகற்றி..
கை விரித்து ஏந்துகின்றன..
பெயர் தெரியா மரங்கள்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) ஜனவரி 25 - 2010

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2442

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக