வியாழன், ஜனவரி 28, 2010

இளவெயில் பூசும் மஞ்சள்..

*

கோடைக்கால மாலையொன்றின்
நுனிக் காம்பில்..
ஊசலாடும்
அரசிலை மீது..

இளவெயில்
மெழுகி பூசும் மஞ்சளை..

செய்வதறியாது
வேடிக்கைப் பார்க்கிறது..
நரம்பில் ஊரும் எறும்பொன்று..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக