வியாழன், பிப்ரவரி 27, 2014

கானல் தார்..

*
நள்ளிரவில் போட்ட புது ரோட்டின்
தார்
இளகுகிறது உச்சி வெயிலில்

பிளாட்பார மரத்து இலையிலிருந்து
வெப்பக் காற்றசைவில்
விழுந்து விட்ட
கட்டெறும்பின் குச்சிக் கால்கள் வழியே
ஏறும் கானல் நீர்

அதன் மண்டைக்குள் ஊற்றுகிறது
குடம் குடமாய்
தாரை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக