வியாழன், பிப்ரவரி 27, 2014

மெத்தென்ற ரேகை நதி..

*
சின்னஞ்சிறு உள்ளங்கையைப் பொத்திக் கொண்டு
வேடிக்கை காட்டுகிறாள் தான்யா

மொட்டைமாடி முழுதும் அவள் நிழலைத் தொடர்ந்து
ரொம்ப நேரக் கெஞ்சலுக்கு பிறகு
மெல்ல விரித்து மலர்த்துகிறாள்
தன் தளிர் விரல்களை

அதில்
மெத்தென்ற ரேகை நதியின் நனைந்த ஈரத்தில்
கனகாம்பரப் பூக்களின் சிவந்த இரு இதழ்கள்
சிரிக்கின்றன
அவளின் குரலோடு

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5777

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக