வியாழன், பிப்ரவரி 27, 2014

திறக்க விரும்பாத இரவு..

*
நிதானமாய் இரு என்கிறாய்
இருந்து பழகுவதற்குரிய சந்தர்ப்பங்களைத்
தர மறுக்கிறாய்

பார்வையின் பசிக்கு இரையாகும்
மௌனங்களைச் செழிப்பாக்குகிறேன்

பதற்றத்துடன் அணுக வேண்டிய சம்பவங்களை
அடுக்கடுக்காய் தைத்து ஆவணப்படுத்தி
எனக்கு அனுப்பி வைக்கிறாய்

திறக்க விரும்பாத இரவை
எனது அறைக்கு வெளியே அடைத்து வைக்கிறேன்

தொடர்ந்து
என் பெயர் சொல்லி நீ அழைக்கும்
குரலில்
திரவமாய் உருகிப் பெருகுகிறது உன்
நிதானமின்மை

ஒரு நிதானத்தைப் பழகுவதற்குரிய
சந்தர்ப்பங்கள்
எப்போதும் அங்கீகரிப்பதில்லை
அதற்கென ஒரு வாய்ப்பை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 11 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5679

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக