வியாழன், பிப்ரவரி 27, 2014

இறுதியாக..

*
மலைச் சரிவொன்றில்
வேகமாக இறங்குவதையோ
மலை உச்சியிலிருந்து
எடையற்று உடல் வீழ்வதையோ
இந்தக் கவிதையில் எப்படிச் சொல்வது

வாழப் பழகிவிட்டதாக நம்பும்
நகர நெருக்கடியில் என்னிடம்
மலையுமில்லை உச்சியுமில்லை

இறுதியாக
நீ பரிசளித்த
ஒரு துயரத்தைத் தவிர

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 14 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5598

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக