வியாழன், பிப்ரவரி 27, 2014

அலையலையாய் விரியும் வளையம்..

*
மனத் திரையில்
மணற்குழி பறித்து விரையும் குளம்படியில்
புழுதியோடு பறந்துக் கொண்டிருக்கிறது
சொல்லின் சிறகு

வனம் புகும் பேச்சொன்று
இருண்மை படரும் மொழியின் தூரிகைக் கொண்டு
வரைந்து பார்க்கிறது உச்சரிக்க விரும்பாத
மௌனத்தை

பதறியபடி உள்ளங்கையில் நடுங்கும்
அர்த்தங்களை
அலையலையாய் விரியும் வளையங்களில் கோர்த்து விட
சேர்ந்துவிடுகிறது உரையாடலின் கரையில்

கரை விளிம்பெங்கும் மிதக்கும் மெல்லியச் சிறகுகளில்
இன்னும் ஈரம் படாத புழுதியின் நிறம்
மிச்சம் வைத்திருக்கிறது ஒரு பாலையின் வனத்தை

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூன்  - 25 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக