வெள்ளி, பிப்ரவரி 28, 2014

உற்று நோக்குகிறாய்

*
எளிதில் உள்வாங்க முடியாத பிரத்யேகப் பார்வையை
எப்போதும் உன்னால் விரிக்க முடிகிறது

சிக்கலான டிசைனில் பின்னப்பட்ட
ஒரு எம்பிராய்டரி சில்க் துணியைப் போல

கதவிடுக்கில் தவறுதலாய் நசுங்கிவிட்ட
விரல் நுனியின் கரிய ரத்தக்கட்டைப் போல

கண்ணாடித் தரையில் ஊற்றிவிட்ட
தண்ணீரைப் போலவும்

கிளைத்து பிரிகிறது நுணுக்க நுழைவாயிலின்
மௌனக் குழிக்குள்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -20 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5884

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக