வியாழன், பிப்ரவரி 27, 2014

பல்லில்லா சாவிகள்

*
சின்னச் சின்னக் குறிப்புகளின் கதவுகள்
தன்னைத் திறந்து என்னை
வேறொரு கதவுக்கு அனுப்பும்போது

அங்கொரு படிமப் பூட்டு
புத்தம் புதியதாய் தொங்கிக் கொண்டிருக்கிறது

காலப் பையைத் துழாவி
கொத்துக் கொத்தாய் கிடக்கும் பல்லில்லா சாவிகளை
மொழிக் கூர் தொட்டு அறுக்க அறுக்க

ஒவ்வொரு பூட்டாய் கழன்று கொள்கிறது
ஓசைகளேதுமின்றி

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5809

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக