வியாழன், பிப்ரவரி 27, 2014

சொல்லாதவைகள்..

*
அத்தனை வசவுகளுக்குப் பிறகும்
உன்னால் சிரிக்க முடிகிறது

ஒரு நிராகரிப்புக்கு பின்னும்
பெயர் சொல்லி அழைத்தால்
உன்னால் திரும்பிப் பார்க்க முடிகிறது

சொல்லாதவைகளின் இருப்பில்
சொன்னவைகள்
பார்வையாளர்களற்ற
ஒரு ரகசிய கொலைக்களத்தில்
நிற்கின்றன

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5786

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக