வியாழன், பிப்ரவரி 27, 2014

இளைப்பாறும் நிழல்களில் பழுக்கும் முரண் இலைகள்..

*
நீ
ஒரு சத்தியத்தை யாசித்து
எனது வாசலில் நின்று கொண்டிருக்கிறாய்

நான்
நமது விவாதங்களைக் குழைத்து
ஒரு பொய்யை வனைந்து கொண்டிருக்கிறேன்

தனித்த பயணத்தின்
வெவ்வேறு நோக்கங்களை அடிக்கோடிட்டபடி
இளைப்பாறும் நிழல்களில்
நம் முரண் இலைகள் பழுப்பதைக் கண்ணுற்றோம்

துயர நதியைக் கடக்க நேர்ந்த தருணத்தில்
மீட்சியின் உள்நீச்சல் பற்றி
உன்னிடம் முற்றிலும் வேறான
ஒரு கோட்பாடிருந்தது

சின்னஞ்சிறு கூழாங்கற்களின் மௌனமென
உருண்டு பயணித்த காலத்தின் மிச்சத்தில்
எனது வாசலில் இப்போது ஒதுங்குகிறாய்

எனக்கு உன்னை எடுத்து
உள்ளங்கையில் அழுத்திக் கொள்வதோ
கண்ணாடிப் பேழையில் அடைத்து வைப்பதோ
ஆல்பத்தில் ஒட்டி வைப்பதோ அவசியமில்லை

நான் என்றென்றைக்கும் 
வனைந்து கொண்டிருக்கும் பொய் முக்கியம்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5786

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக