வியாழன், பிப்ரவரி 27, 2014

சீரற்ற மூச்சின் அபத்த தாளம்

*
மரணத் துளையில் கசியும் தனிமை இருளை
குறுகிய இவ்வறையெங்கும் நிரம்பச் செய்கிறது
எனது இருப்பு

சுவாசத்தின் சீரற்ற மூச்சின் அபத்த தாளத்துக்கு ஏற்ப
ஒற்றை ஜன்னல் திண்டில்
வால்துடிக்கக் கொத்துகிறது
காய்ந்த சோற்றுப் பருக்கைகளை அந்தக் குருவி

மேலும்
இன்னொரு நாளை எனக்கென்று
கொண்டு வந்து கொத்துகிறது
தினமும்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5809

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக