வியாழன், பிப்ரவரி 27, 2014

நிறமற்று சிதறும் பகல்

*
கைத்தட்டி என்னையழைத்து
ஒரு ரகசியம் பகரும் உங்கள் அந்தியின்
நிறம் எனக்கு உவப்பானதாய் இல்லை

என்னுடைய
மெய்த் தீண்டலின் நுனித் திரி
பொட்டுத் தீயை அணையவிட்டு
காற்றிலேற்றுகிறது கருகிய புகையாக
அத்தனை நிஜங்களையும்

ஆழ நுகர்ந்து சுவாசம் நிரம்பும்
மௌனத் தவிப்பை
சொற்கள் கூட்டித் துப்புகிறேன்

நிறமற்று சிதறுகிறது
உங்களோடு சேர்ந்து எனது பகலும்

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5786

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக