வியாழன், பிப்ரவரி 27, 2014

அசையும் கைவிரல்கள்..

*
துயிலும் யாமத்தில் திரள்கிறேன்
உன் இதழ் மீது கவிழத் துடிக்கும்
சாம்பல் மேகமென

பேருவகையோடு அசையும் கைவிரல்கள்
காற்றில் எழுதுகின்றன
காணும் கனவை

உன்னை அப்படியே சூறையாடுவது
காதலை மிச்சம் வைக்காமல் குடிப்பது
திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பங்களை நோவது

எல்லாம்
மிதக்கிறது வெறும் வார்த்தையாக

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 21 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5617

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக