வியாழன், பிப்ரவரி 27, 2014

வரிசையின் நீர் விளிம்பு..

*
எல்லா நேரத்திலும்
எப்போதும்
ஒரு வரிசையைப் பின்பற்றுவதில்லை
எறும்புகள்

வரிசையிலிருந்து பிரிந்தலையும் சில
தரையில் சிந்திக் கிடக்கும் நீர் விளிம்புகளில் முகம் பார்க்கும் சில
கடிப்பதற்கான கால் விரல்களை சதா தேடியலையும் சில

ஒரு வழக்கமான உணவிலிருந்து
மாறுபாட்டை நோக்கித் திரியும் சொற்ப எறும்புகள்
ருசியை சுமக்கின்றன

அதைத் தன் புற்றுக்கு வெளியே பதுக்கும் ரகசியங்களறியாமல்
முன்னும் பின்னும் பதறுகின்றன
திடீரென பெய்ய நேரும் ஒரு மழை வரை

*****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜூலை - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5729

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக