திங்கள், ஏப்ரல் 21, 2014

வழித்துணைப் பூவின் சிவந்த இருள்..

*
மையிருட்டு பூசிக் கிடந்த
இரவில்
பாதையைக் காணோம்

சட்டெனப் பூத்த
சிகப்பு பூவொன்று நெருங்கியது

சிகரெட் நுனியின் கங்கு சிவக்க
எங்க போகணும்
என்ற குரல் வழித்துனையாயிற்று

இருட்டு என்பது மிகக் குறைந்த ஒளி
என்றானே பாரதி

****

நன்றி : ( மலைகள்.காம் ) [ ஜூன் - 17 - 2013 ]

http://malaigal.com/?cat=8&paged=9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக