புதன், ஏப்ரல் 30, 2014

பெருகும் டிக் ஒலியில் முளைக்கும் முட்கள்

*
இருந்த இருப்புக்கு அறை இருள்கிறது
சுவர்க் கடிகாரத்தின் நொடிமுள் துடிப்பு
எப்படி துல்லியமாயிற்று

பெருகும் டிக் ஒலியில்
நனவிலி மனநிலத்தில்
முளைக்கின்றன முட்கள்

எண்ணில்லா கடிகாரம்
மணிக்கட்டு நரம்பொன்றைத் துண்டிக்கிறது
நிதானமாய்

தட்டும் கதவொலியில்
டிக் என்றுத் தொங்கியபடி
இறக்கிறது
சாவித்துவாரம்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக