புதன், ஏப்ரல் 30, 2014

பாவமன்னிப்பு நெளியும் நரம்பு

*
சிலுவை செருகிய
முதுகுத்தண்டை
பிரார்த்தனைக் கொண்டு உருவிப்போடு

உன் பாவமன்னிப்புக் கூண்டிலிருந்து
புறா வெளியேறிவிட்டது

சாத்தானின் கெண்டை நரம்பென
நெளியச் சபிக்கிறேன்

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக