திங்கள், ஏப்ரல் 14, 2014

நொடி முள்ளிலிருந்து வழிந்திறங்கும் நிழலின் இழை..

*
வாழ்வதின் அவசியத்தை
ஒரு செய்தித்தாளைப் போல தினமும் பிரித்து வைத்துக் கொள்கிறோம்
நமக்குப் பிடித்தமான ஒரு மேஜையில்

திறந்திருக்கும் வாசல் வழியே கொஞ்சமும் தயங்காமல் வெயில் வருகிறது
கடிகாரம் தொங்கும் சுவரைத் தொட்டதும் நின்றுவிடுகிறது

நொடி முள்ளிலிருந்து நெடுக வழிந்திறங்கும் நிழலின் இழை
வெயிலுக்கு தருவதில்லை தன் உதடுகளை

துடிக்கும் மெல்லிய சப்தத்தோடு அடங்கிவிடுவதாக இருக்கிறது
அவற்றின் சன்னமான உரையாடல்

அன்றாட நிகழ்வின் அத்தனை செய்திகளையும்
பிரித்துப் படிக்க நமக்கு தான் நேரமிருப்பதில்லை

அதனால் என்ன

ஒரு சமயம் போல
வாசல்கள் திறந்தே கிடக்கின்றன

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 5 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/24086-2013-06-06-09-00-33

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக