புதன், ஏப்ரல் 30, 2014

ஈரம் படரும் இருள் தடம்..

*
பிரார்த்தனையின் ஓசை முனகலாக ஒலிப்பதில்
சுற்றுச் சுவருக்கு மறுப்பேதுமில்லை

மேற்கூரையில் திரளும் பிசுபிசுப்பு
கடவுள் செவியில் படரும் ஈரம் என நம்புக

நடுங்கும் கூப்பிய விரல்களின் சத்தியங்கள் குளிர்வதை
அலையோடும் இமைக்குள் தவித்து உருளும் கண்களில்
பிறழும் காட்சியின் வர்ணங்கள் நனைவதை
மூத்தோர் விந்து உமட்டும் நாபி உள்முடிச்சில்
தாயின் மூச்சுக்காற்று திணறுவதையும்
சரணாகதி செய்ய

முனகலாகும் ஓசையில்

பிரார்த்தனையின் சுற்றுச் சுவரெங்கும்
இருண்ட கண்டத்தில் முளைத்த பிஞ்சு விரல்களின் தடங்கள்

*****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 21 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1758


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக