திங்கள், ஏப்ரல் 14, 2014

நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள்

*
வெகு நாட்கள் கழித்து
செல்போனில் அழைத்திருந்தாய்
காயும் வெயிலில்
என் மாடிச் செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன்

உன்
குரலின் நீர்மையில்
நான் ப்ரியமுடன் வளர்க்கும்
கனகாம்பரப் பூக்கள் முகம் வாடிவிட்டன

வெயிலில் செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றக் கூடாதாம்

உனக்கேன் தெரிந்திருக்கவில்லை
குரலின் நீர்மையோடு 

வெயில் பொழுதில்

அழைக்கக் கூடாதென்று

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 23 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/25820-2013-12-24-09-42-31
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக