புதன், ஏப்ரல் 30, 2014

நிறமற்று உதிரும் உடல்களின் இறகு

*
நம்
இருவருக்கிடையில் ஒரு குறுகிய மௌனமிருந்தது
அதுவரை பேசிய உரையாடல்கள் அங்கு மிதக்கின்றன

அவற்றிலிருந்து வெளியேறும் பறவைகள் கூடு திரும்புவதில்லை என்றுமே
நிறமற்ற அதன் சிறகிலிருந்து உதிர்ந்த இரண்டொரு இறகுகளோடு
நாம் திரும்ப வேண்டியிருந்தது
தத்தம் உடல்களுக்கு

சாய்ந்த பொழுதின் துயரைப் பூசி
கூடுடைய பறவையின் திசையெங்கும் பரவத் தொடங்குகிறது
பொன்னந்தி நிறத்தில் உரையாடலின் இசை

ஊற்றுக்கண் பிளக்கும் ரகசியத்தின் முதல் துளியில்
உப்பெனப் பூக்கிறது பறத்தலின் மௌனச் சொல்

****

நன்றி : ' யாவரும். காம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 21 - 2013 ]

http://www.yaavarum.com/archives/1758

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக