திங்கள், ஏப்ரல் 14, 2014

உட்சுவரின் மௌன நிழல்..

*
இரவின் துளி ஈரம்
பரவும் இவ்வறையெங்கும்

கணுக்கால் தொட்டு நீளும் யாமத்தின்
முதல் கீற்றை ஒற்றியெடுக்கும்  உதடுகள்
உச்சரிக்க மறுக்கின்றன

முந்தையப் பகலை அதன் கானலை

நினைவில் மிதக்கும் முகங்களின்
நெளியுணர்ச்சிகள்  குமிழ் விட்டு வெடிக்கிறது
மொழியற்ற மொழியொன்றின் ஆழத்தில்

கூரையின் உட்சுவர் சுமக்கிறது
கரிய நிழலின் மௌனத்தை

****


நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மே - 27 - 2012 )

http://puthu.thinnai.com/?p=11647
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக