திங்கள், ஏப்ரல் 14, 2014

மை தீரும் பேனா..

*
நீ
சொல்லாத ஒரு வார்த்தையின்
அடர்த்தி
எனது இரவைத் தூங்கவிடாமல்
விடிய வைக்கிறது

நீ
சொல்லத் தயங்கும் ஒரு வார்த்தையின்
வெப்பம்
எனது பகலை என்னோடு
எரிய விடுகிறது

நீ
சொல்ல முயலும் ஏதோவொரு வார்த்தை
எனக்கான
மிஸ்டு காலின் அதிர்வோடு
அடங்கிப் போகிறது

நீண்ட அயற்சிக்கு பின்
மை தீர்ந்து போன
ஒரு பேனாவின் உதறலோடு
நினைவு சிதறும் பிறிதொருநாளில்

பிரிக்கப்படாத ஒரு கடிதமாக
படிக்க விரும்பாத ஒரு துயரமாக
நீ
சொல்லியிருக்கும் வார்த்தைகள்
மொத்தமும்
இன் பாக்ஸில் தேங்குகிறது

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ நவம்பர் - 4 - 2013 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/25383-2013-11-05-09-41-15 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக