ஞாயிறு, ஜூன் 27, 2010

மெட்ரோ கவிதைகள் - 71

*
பிளாட்பாரத்தில்
யாருமற்றுக் காத்திருக்கும்
குடி நீர் கேனின்
கழுத்து வளைவை..

சுற்றி சுற்றி வருகிறது
ஒரு கட்டெறும்பு..

நீரின் மீது நடக்க முடிந்த
அதிசயத்தையும்
அதைப் பருகி தாகம் தீர்ப்பதற்கான
வாசலைத் தேடும்
ஆயாசத்தையும்..

ஏகக் கணத்தில் எதிர்க் கொள்கிறது

வெயில் காயும்
இந்த நகரத்தின்

நடுப் பகல்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக