*
கிடார் ஒன்று இருக்கிறது என்னிடம்
இசைக்கத் தெரியாது..
பெருமழையுடன் கூடி
புயற் காற்று வீசிய
மாலைப் பொழுதில்..
ஜன்னல்களும் கதவுகளும்
வீடு நனைதல் குறித்த கவலைகளோடு
அடைப்பட்டுக் கொண்டுவிட்ட
தருணமொன்றில்..
கிடாருடன்
மொட்டைமாடியில் தனித்து நின்றேன்..
பலமாய் வீசிய
ஒரு
கடுங்காற்று..
அதன் நரம்பில் மோதி
மீட்டிச் சென்ற இசைக் குறிப்பு..
ஜாஸா..!
ராக்கா..?
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக