ஞாயிறு, ஜூன் 27, 2010

சில்லிட்ட நீரின் வெண்ணிற ஆவிகள்..

*
பாறைகள் அடர்ந்த
வனப் பாதையில்
ஓடும்
நதியைப் போல்
கொப்பளிக்கிறது உணர்வு

இறுதியிலோ
இடையிலோ
தேங்கும்
குளிர்ந்த ஏரியின் மீது

அலைந்தபடி பரவும்
சில்லிட்ட நீரின்
வெண்ணிற ஆவிகளை ஒத்திருந்தது

உன் மீதான
எடுக்கப்படாத ஒரு தீர்மானம்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக