*
நினைவின் மேசையில்
அடுக்கி வைத்திருக்கும்
உன் ஞாபகக் குறிப்புகளை
அவசரமாய்
புரட்டிப் பார்த்த காற்று
ஜன்னல் தாண்டி
மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும்
காகத்தின் கழுத்தில்
சாம்பல் நிற மென்மயிரை
உரசிப் போகிறது..
வேறெங்கோ போய்
யாரையோ அழைக்க..!
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஜூன் - 18 - 2010 )
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=9640&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக