ஞாயிறு, ஜூன் 27, 2010

அப்படியொன்று இல்லவே இல்லை..

*
நீ தயக்கங்களோடு
புனையும் வார்த்தைகளின்
நிகழ்வை
உன் பேனாவிலிருந்து திறக்கிறாய்
மிக அமைதியாக..

தருணங்களின் நுண்ணியக் கணங்களில்
அப்படியொன்று இல்லவே இல்லை
என்பதாக சூழ் கொள்கிறது
உன் படைப்பின் திறந்த வெளி..

பதுங்கி நடைப் பழகும் மதிற் பூனையென
இருண்மையின் கொடிப் பற்றி
மனதுக்குள் இறங்குகின்றன
பசித்த படிமங்கள் சில..

ஒரு வார்த்தை
ஒரு வாக்கியம்
ஒரு பத்தி
ஒரு பக்கம்
ஒரு புத்தகம்

இவை முடிவற்று நீளுகின்ற
எழுத்துப் பாதையின் கருநிழலை அண்டி
இருளில் மூழ்கிக் காத்திருக்கின்றன
ஒவ்வொரு முறையும்
நீ காகிதத்தில் விட்டுச் செல்லும்

எழுதாத வார்த்தைகள்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக