ஞாயிறு, ஜூன் 27, 2010

தனித்திருப்பதாக புலம்புகின்றன ஒற்றெழுத்துக்கள்..

*
எப்போதும் தனித்திருப்பதாக
புலம்புகின்றன
ஒற்றெழுத்துக்கள்

துணை சேர்க்கும் சொற்களோடு
இணைந்து
மறு சொல்லை
ஓர் உடன்படிக்கைக்கு
பணிய வைக்கும்
ஒப்பந்த மேஜையாகவும்

அதன் மீது
தாகம் தீர்க்க நிற்கும்
தண்ணீர் பாட்டில் போல
காத்திருக்கவும்
செய்கின்றன

ஒற்றை எழுத்துக்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக